எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதை மட்டும் செய்யாதீர்கள் : இயக்குனர் பாண்டிராஜ்

நடிகர்
சூர்யா
தற்போது
பாண்டிராஜ்
இயக்கத்தில்
எதற்கும் துணிந்தவன்
படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான
சூரரை போற்று
மற்றும்
ஜெய் பீம்
ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இவரின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் OTT யில் வெளியானதும், பல நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாவதாலும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினியின் இந்த மனசு யாருக்கும் வராது..தலைவர் வேற லெவல்..!

இந்நிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் சூர்யா, பாண்டிராஜ் ஆகியோர் பேசினார்கள்.

இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில், இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் தயவுசெய்து இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரிடமும் வெளியிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இப்படம் ரசிகர்ளுக்கு ஒரு கமர்ஷியல் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.