அது பொம்மை துப்பாக்கிங்க: உக்ரைன் அழகி உருக்கம்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா 7ஆவது நாளாக பல்முனைத் தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்-யை குறி வைத்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவமும் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 6000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக, நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுத்த அந்நாட்டு அதிபர், அவ்வாறு வருபவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், அந்நாட்டு சிறையில் உள்ள ராணுவப் பின்புலம் கொண்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னாள் அழகி
அனஸ்டாசியா லென்னா
துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #standwithukraine, #handsoffukraine ஆகிய ஹேஷ்டேகில் பதிவிட்டார். உக்ரைன் ராணுவத்தில் பெண்கள் அதிகமாக உள்ள நிலையில், தற்போது நாட்டை காக்க உக்ரைன் முன்னாள் அழகியும் ராணுவத்தில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

View this post on Instagram A post shared by Miss Ukraine����Anastasiia Lenna (@anastasiia.lenna)

இந்த நிலையில், துப்பாக்கியுடன் புகைப்படம் பதிவிட்டது பற்றி உக்ரைன் முன்னாள் அழகி அனஸ்டாசியா லென்னா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தற்போதைய சூழ்நிலை காரணமாக நான் பேச விரும்புகிறேன்! நான் ஒரு ராணுவ வீரர் அல்ல, ஒரு சாதாரணப் பெண், என் நாட்டிலுள்ள எல்லா மக்களைப் போலவே நானும் ஒருத்தி. நான் பல வருடங்களாக
ஏர்சாஃப்ட்
விளையாடுகிறேன். airsoft என்றால் என்ன என்பதை நீங்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். துப்பாகியுடன் நான் பதிவிட்ட அனைத்து படங்களும் மக்களை ஊக்குவிக்கவே.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அனஸ்டாசியா லென்னா தனது பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: “மில்லியன் கணக்கான மக்களைப் போலவே நானும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உக்ரைன் எங்கள் பெண்கள் வலிமையான, நம்பிக்கையான மற்றும் சக்திவாய்ந்தவள் என்பதை காட்டுவதைத் தவிர வேறு எந்த பிரசாரத்தையும் அந்த புகைப்படம் மூலம் நான் செய்யவில்லை. எனது நாட்டிற்கான அனைத்து தரப்பிலான ஆதரவையும் நான் பாராட்டுகிறேன், உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுகிறோம். வெற்றி பெறுவோம்!

View this post on Instagram A post shared by Miss Ukraine����Anastasiia Lenna (@anastasiia.lenna)

நான் கீவ்-இல் பிறந்து வாழ்கிறேன். இது என்னுடைய நகரம். உக்ரைன் எனது நாடு. பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய கூட்டமைப்பு எங்கள் நிலங்களில் நுழைந்து பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளை கொல்லத் தொடங்கியது. உக்ரேனிய மக்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஏனெனில், நாங்கள் எங்கள் நிலங்களில் இருக்கிறோம்! நான் உலக மக்கள் அனைவரிடமும் பேசுகிறேன்! உக்ரைனில் போரை நிறுத்துங்கள்! மக்கள் யாரும் இறக்கக்கூடாது! இந்த போரை நாம் அனைவரும் சேர்ந்து நிறுத்தலாம். ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்த உக்ரேனிய மக்களுக்கு உதவுங்கள்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய விமானப்படை ஆக்ஷனில் “மிஸ்ஸிங்”.. அடக்கி வாசிக்கும் புடின்.. வேற லெவல் ஸ்கெட்ச்!

புகைப்படத்தில் உக்ரைன் முன்னாள் அழகி அனஸ்டாசியா லென்னா கையில் இருந்த துப்பாக்கி, ஏர்சாஃப்ட் எனும் ராணுவ உருவகப்படுத்துதல் விளையாட்டைச் சேர்ந்தது. ராணுவ போர்களை போன்ற போலியான விளையாட்டை விளையாடும் போது, உண்மையான ஆயுதங்களை போன்ற பிரதிகள் பயன்படுத்தப்படும். அந்த மாதரியான பொம்மை துப்பாகியே அவர் கையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.