உக்ரைனில் நேரலையில் ஒருவர் செய்தி வாசித்து கொண்டிருந்த போது கட்டடத்துக்கு பின்னால் குண்டு மழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
நேட்டோ அமைப்பு உக்ரைன் நாடுடன் சேர்வதை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.
இந்த போர் சுமார் 8 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இந்த போரின் விளைவாக இதுவரை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற இக்கட்டான சூழலில், உக்ரைன் தலைநகர் Kyiv-வில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளர் செய்தியை வாசித்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் சிறிது தூரத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
WATCH: 2 large explosions light up the Kyiv skyline as reporter goes off the air pic.twitter.com/MXlYuD8i6J
— BNO News (@BNONews) March 3, 2022
அந்த வீடியோவில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சத்தம் மற்றும் வெளிச்சம் பார்ப்போரின் கண்களை கூசும் வகையில் பதறவைத்துள்ளது.