ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தியது ஏடிகே மோகன் பகான்..!

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் சென்னை அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 45+3 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னையின் எப்சி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஒடிசா எப்.சி அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.