ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. 

இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்து 9-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த ஆட்டத்தில் கேரளா அணி சார்பில் சஹல் சமத் ஆட்டத்தின் 19 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும் அல்வரோ ஆட்டத்தின் 45+2 வது நிமிடம் மற்றும் 60 வது நிமிடம் என இரு கோல்கள் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் டியாகோ ஆட்டத்தின் 71 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.