காப்பீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு; செல்போன் எண் கட்டாயம்: புதிய அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுகிறது. சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அளிப்பது, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், இழப்பீடு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண் இடம்பெற செய்வதும் இந்த அறிவிக்கையின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.