நல்ல வேளை, நயன்தாராவின் காதல் முறிஞ்சுடுச்சு: ரசிகர்கள் ஹேப்பி

என்னது, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்களா என்று வியக்க வேண்டாம். அவர்கள் பிரியவில்லை. இது நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்தது பற்றி பேசப்படுகிறது.

விக்னேஷ் சிவனுக்கு முன்பு பிரபுதேவாவை காதலித்தார்
நயன்தாரா
. காதலில் தீவிரமாக இருந்த அவர் இந்து மதத்திற்கு மாறினார். தன் கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தினார்.

வீட்டோடு இருக்க முடிவு செய்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால் அதற்குள் நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

பிரபுதேவாவை பிரிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் நயன்தாரா. படிப்படியாக முன்னேறி லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றார். பிரபுதேவாவை பிரிந்த பிறகே நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரானார். அதனால் அந்த காதல் முறிந்தது நல்லதே என்கிறார்கள் ரசிகர்கள்.

ஓ இதனால் தான் நயன்தாரா, விக்கி இன்னும் கல்யாணம் பண்ணலயா?
நயன்தாராவின் கெரியருக்கு ஆதரவாக இருக்கிறார்
விக்னேஷ் சிவன்
. மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம் நயன்தாரா.

அந்த காரணத்தால் தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருப்பதாக பேசப்படுகிறது. நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.