Samantha:என்ன கொல்லப் போறாரு: மாஜி கணவர் பற்றி சமந்தா ஏன் இப்படி சொன்னார்?

சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள். இதையடுத்து அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டனர்.

முன்னதாக நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
சமந்தா
பேசிய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் சமந்தா கூறியதாவது,

என் கணவரின் முதல் மனைவி தலையணை தான். நாங்கள் கட்டிப் பிடிக்கும்போது கூட அது நடுவில் இருக்கும். இதை நான் இங்கு சொல்லியதற்காக
நாக சைதன்யா
என்னை கொல்லப் போகிறார் என்றார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

புது துவக்கம்: சமந்தாவின் மாஜி கணவருக்கு குவியும் வாழ்த்து

நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாகிவிட்டார் சமந்தா. இந்நிலையில் தூதா என்கிற வெப்தொடரில் நடிக்கிறார் நாக சைதன்யா. அந்த தொடரை விக்ரம் கே. குமார் இயக்கி வருகிறார்.

நாக சைதன்யா வெப்தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.