பாகிஸ்தான்: மத வழிபாட்டு தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – ஐ.எஸ். பொறுப்பேற்பு

லாகூர்,
பாகிஸ்தானில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் நேற்று குண்டு வெடிப்பு நடைபெற்றது. அந்நாட்டின் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டு தளம் உள்ளது.
அந்த மத வழிபாட்டு தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். மேலும், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்கச்செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். மேலும், 194 பேர் படுகாயமடைந்தனர்.

 இந்த கொடூர தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படியினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெஷாவர் மத வழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.