300 கி.மீ தொலைவில் தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல் சின்னம்.? <!– 300 கி.மீ தொலைவில் தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல் சி… –>

 

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது இன்று மாலைவரை வடமேற்குத் திசையிலும், அதன்பின் தென்மேற்குத் திசையில் வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 8 அன்று அநேக இடங்களில் மிதமான மழையும், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல், மேற்கு மத்திய வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மார்ச் 7ஆம் நாள் காலை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.