அரக்கோணம்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து: தலைமை காவலர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் காவலர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு சுஜாதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
image
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து அவர் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமாரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஒருமணி நேரம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.
image
துகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த திருத்தணி காவல் ஏஎஸ்பி. சாய் பிரதீப் செந்தில்குமார் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு செந்தில்குமார் உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.