அந்த அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி வாக்குமூலம்.! 

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம், டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுகவின் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனி செல்வி தொடர்ந்த வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் நடந்த தேர்தல் முடிவை, தேர்தல் அதிகாரி திமுகவுக்கு ஆதரவாக மாற்றியது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரியை மார்ச் மாதம் 7ஆம் தேதி (இன்று ) ஆஜராகும்படியும்,  பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ நகலை பாதுகாக்கவும் நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், “தேர்தல் நடத்தும் அலுவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவருக்கு (அந்த தேர்தல் அதிகாரிக்கு) கொடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக தான் தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தார்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி அவர்கள், தேர்தல் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்தது யார்? என்பது குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.