இன்று சபரிமலையில் ஆராட்டு திருவிழா தொடக்கம் : வரும் 18 ஐயப்பனுக்கு ஆராட்டு

பரிமலை

ன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளது.   வருகிற 19-ம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.

இன்று காலை 10.30 மணிக்கு 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்த கொடியேற்று விழாவில் சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

வரும் மார்ச் 18-ம் தேதி காலை 11 மணிக்குப் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் மாதத்தின் சித்திரை மாத பூஜை மற்றும் மலையாள மாதத்தின் மீனம் மாத பூஜை, மார்ச் 15ல் மாதாந்திர தரிசனம் தொடங்க உள்ளது.  அப்போது தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்குத் தரிசன அனுமதி வழங்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

தற்போது ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை நடை திறக்கப்பட்டதையொட்டி இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருவிழாவை முன்னிட்டு கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.