நாளை 5 மாநில தேர்தல் முடிவு: வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வியாழக்கிழமை வெளியாக இருக்கின்றன.

இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் 11 மணி முதல் முன்னணி நிலவரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.