எரிபொருள் நிலைய queue வரிசைக்கு சனிக்கிழமைக்குள் தீர்வு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் queue வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி – சனிக்கிழமைக்குள் தீர்வுகாணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுளார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்

மக்கள் queue வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கள் – செவ்வாய் கிழமைக்குள் மின் துண்டிப்பு குறைக்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.