இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!



இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அண்மையிலேயே லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில் தற்போது மீளவும் விலை அதிகரிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.