Nayanthara:விக்னேஷ் சிவனை வைத்து சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா?

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். அவர்கள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

சிம்புவுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார்
நயன்தாரா
. அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறியவே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் துவங்கினார்.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறக் கூட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நயன்தாராவின் பழைய காதல் பற்றி பேசப்படுகிறது. அதாவது, சிம்புவை பழிவாங்கவே விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிம்புவுக்கு நெருக்கமான ஒருவரை காதலித்து அவரை பழிவாங்க முடிவு செய்தாராம் நயன்தாரா. இதை சிம்புவிடமே கூறினாராம். அதன்படி சிம்புவுடன் நெருக்கமாக இருந்த விக்னேஷ் சிவனை தேர்வு செய்தார் என்று கூறப்படுகிறது.

நல்ல வேளை, நயன்தாராவின் காதல் முறிஞ்சுடுச்சு: ரசிகர்கள் ஹேப்பி
நயன்தாராவே பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு தன் வேலை, காதலர் என்று இருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

கெரியரை பொறுத்தவரை
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து நயன்தாரா நடித்த அந்த படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.