எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஏன் கூட்டம் வரவில்லை? கே.ராஜன் கருத்து

சூர்யாவின்
எதற்கும் துணிந்தவன்
படம் நேற்று வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. படத்திற்கு என்னதான் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இதற்கு முன்பு சூர்யாவின் சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தபோது கூட அப்படத்தின் முதல் நாள் வசூல் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் வராதது
சூர்யா
ரசிகர்களை குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அநியாயத்திற்கு சிக்கலில் சிக்கிவரும் சூர்யா…போலீசில் புகார் அளித்த கட்சியினர்..!

இதைப்பற்றி
கே.ராஜன்
கூறுகையில், இதற்கு முன்பு வெளியான டாக்டர்,
மாநாடு
போன்ற படங்களுக்கு இருந்த ஒரு பரபரப்பு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சிம்புவின் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய படங்கள் முதல் ஒரு வாரத்திலேயே லாபகரமான வசூலை எட்டியது.

ஆனால் எதற்கும் துணிந்தவன் படம் முதல் நாளே வசூலில் திணறுகிறது. இதற்கு காரணமாக நான் கருதுவது படத்தின் கதைக்களமாக இருக்கலாம். ஏனென்றால் இப்படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை எடுத்து சொல்லியிருக்கின்றார் பாண்டிராஜ்.

என்னதான் அது நல்ல விஷயமாக இருந்தாலும் ரசிகர்கள் அதே கதைக்களத்தில் பல படங்களை பார்த்துவிட்டனர். பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து பல படங்கள் வந்துவிட்டன. ஒருவேளை அதன் காரணமாக இப்படத்திற்கு ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என எண்ணுகிறேன்.

சூர்யா மிகப்பெரிய நடிகர் அதில் எந்த சந்தேகமும் இல்லை இருப்பினும் ரசிகர்கள் வித்தியாசமான கதைக்களங்களையே விரும்புகின்றனர்.என்னதான் எதற்கும் துணிந்தவன் படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை நல்ல எண்ணத்தில் எடுத்து கூறினாலும் அதைப்போன்று பல படங்கள் வந்துவிட்டதால் மக்களின் ஆற்வம் இப்படத்திற்கு இல்லை என கருதுவதாக கே.ராஜன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.