நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா மற்றும் இளவரசி.. நீதிபதி அதிரடி உத்தரவு.!!

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் தண்டனை முடிந்து 2021 ஜனவரி மாதம் விடுதலையானார். சிறையில் இருக்கும்போது சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். 

இதனைத்தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சசிகலாவிடம் லஞ்சம் பெற்றதாக தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, காவலர் சுரேஷ், கஜராஜ் மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து ஜனவரி 7ஆம் தேதி இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உட்பட 7 பேரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11ம் தேதி இன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இரண்டு கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக பெங்களூர் 24வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு க்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது சசிகலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் இளவரசியும் ஆஜரானார். மேலும், சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், சோமசேகர், அதிகாரிகள் சுரேஷ், காமராஜ் மாகனூர் ஆகியோர் ஆஜரானார்கள்.

இதனைத்தொடர்ந்து, பெங்களூரு மத்திய சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா மற்றும் இளவரசி மனுத் தாக்கல் செய்தார். தற்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூர் சிறப்பு நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இருவருக்கும் தலா 3 லட்சம், இரண்டு தனி நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.