இலங்கையில் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை! – எவ்வளவு தெரியுமா?

ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுக்குமே நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியுடன் எரிபொருள் விலை உயர்வு செய்தியும் உடன் வருகின்றது. மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகின்றது.

இலங்கை

இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மற்றும் உள்ளூர் துணை நிறுவனமான லங்கா ஐஓசி எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, இலங்கையின் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியமும் விலையை உயர்த்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபனத் துறைத் தலைவர் சுமித் விஜேசிங்க, “இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் ஒக்டேன்- 92 வகைப் பெட்ரோலின் விலை 77 ரூபாயும், ஒக்டேன்- 95 வகை பெட்ரோல் 76 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை

மேலும், டீசலின் விலை 55 ரூபாயும், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாய்யும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒக்டேன்- 92 வகைப் பெட்ரோல் ஒரு லிட்டர் 254 ரூபாய் எனவும், ஒக்டேன் 95 வகைப் பெட்ரோலின் விலை 283 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணையின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜ பக்ஷ்சே

கடந்த பலமாதங்களாகவே இலங்கையில் நிகழும் பொருளாதார சூழலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான பணவீக்கமும் , பெரும் அளவிலான கடன் சுமையுமே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. பலவேறுபட்ட அரசியல், பொருளாதார காரணிகளை கொண்ட இந்த நிலையால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் தான் குமுறுகிறார்கள் அந்நாட்டு மக்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.