சாமுண்டீஸ்வரி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்| Dinamalar

மைசூரு:மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில், ஜெ., தோழி சசிகலா சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தி கடனை செலுத்தினார்.

பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜராக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி இருவரும், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர்.

நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்ததும், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், அவர்கள் நேற்று காலை மைசூரிலிருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்துதரிசனம் செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.