‘250 கிலோ எடை, ராட்சத உருவம்’- கர்நாடக மீனவர் வலையில் சிக்கிய அரிய “தச்சன் சுறா மீன்”

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மால்பே என்ற இடத்தில் வியாழன் அன்று மீனவர்களால் மிகவும் அரிதான மற்றும் மிகவும் ஆபத்தான தச்சன் சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 கிலோ எடையுள்ள 10 அடி நீளமுள்ள தச்சன் சுறா, ‘சீ கேப்டன்’ என்ற படகின் வலையில் தவறுதலாக சிக்கியுள்ளது.
தச்சன் சுறா கயிற்றால் கட்டப்பட்டு தரையில் கிடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஜேசிபி கிரேன் மூலம் மரக்கறி மீன் தூக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள ஏலப் பகுதிக்கு அந்த மீன் கொண்டு வரப்பட்டு மங்களூருவைச் சேர்ந்த வியாபாரிக்கு விற்கப்பட்டது.
Image
ஆனால் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 இன் அட்டவணை 1 இன் கீழ் இந்தியாவில் தச்சன் சுறா மீன்கள் பாதுகாக்கப்பட்ட இனங்களை சேர்ந்தது. அதாவது அவற்றை வேட்டையாடுதல் மற்றும் வணிகம் செய்வது புலி அல்லது யானையைக் கொன்றதற்காக வழங்கப்படும் தண்டனையின் அளவைப் போன்றது. மீன்வளத் துறை அலுவலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தச்சன் சுறா மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

As per the experts, Carpenter sharks are an endangered species with their population has been on a decline. They are a protected species in India under Schedule I of the Wildlife Protection Act 1972.pic.twitter.com/mEruTiwFyQ
— Mangalore City (@MangaloreCity) March 12, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.