நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.!

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயகுமார், செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.  

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்மூலம் நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்கள் முன்பு விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், நில அபகரிப்பு, திமுக பிரமுகர் மீது தாக்குதல் உள்பட ஜெயக்குமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.