ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்த வீரர்களை சந்தித்து உக்ரைன் அதிபர் ஆறுதல்

ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. Hostomel மற்றும் Irpin ஆகிய இரண்டு நகரங்களில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக போலாந்தின் எல்லையில் உள்ள ராணுவப் பயிற்சி தளத்தின் மீது ரஷ்யான நடத்திய வான்வெளி தாக்குதலில், 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 134 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.