ஆசிரியையின் ஆபாச படங்களை வெளியிட்ட மாஜி காதலன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே தளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹசன் (29). துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்போது இந்தோனேசியாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்படி 2 பேரும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தனர். கடந்த வருடம் அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இளம்பெண் தனது நாட்டுக்கு திரும்பிச் சென்றார். தொடர்ந்து அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் இளம் பெண்ணின் ஆபாச போட்டோ, வீடியோக்கள் வெளியாகின. இது குறித்து அறிந்த இளம்பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் அவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஆபாச படங்கள் வெளியானது தெரியவந்தது. இதற்கிடையே இளம் பெண்ணின் உறவினர்கள் சிலரது செல்போனுக்கும் அந்த ஆபாச படங்கள் வந்தது. உடனே இளம்பெண் கேரள டிஜிபி அனில்காந்துக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்தோனேசிய இளம்பெண்ணின் ஆபாச படங்களை வெளியிட்டது, முன்னாள் காதலன் ஹசன் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் ஹசனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். தொடர்ந்து நேற்று ஹசன் கேரளாவுக்கு திரும்பி வந்தார். அப்போது கொச்சி விமானநிலையத்தில் வைத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.