சேர்ந்து வாழ மறுத்த மனைவி… கணவன் செய்த விபரீத செயல்..!

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நல்லிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விக்டர். இவருக்கு ஜூலியட் என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். விக்டருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால், கடந்த ஆறு மாதங்களாக அவரது மனைவி ஜூலியட் கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். பள்ளி ஆசிரியையான ஜூலியட் பள்ளி முடிந்து செம்மனார்கோவில் கடைவீதி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த வினோத்குமார் அவரிடம் சமாதானம் பேசி உள்ளார்.

ஆனால் ஜூலியட் அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவி ஜூலியட்டை பிளேடால் கழுத்தில் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.