புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் ஒருவர் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ள வீடியோ வைரலானது.
டில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம்ஆத்மி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனம் ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களை ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கிழக்கு டில்லியை சேர்ந்த ஆம்ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவர், அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இதனால் அசுத்தம் அடைந்த அவருக்கு ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள் ஹசீப்-உல்-ஹசன் மீது பால் ஊற்றி குளிப்பாட்டினர். இது தொடர்பாக ஹசீப் கூறுகையில், ‛கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பா.ஜ., கவுன்சிலரும், பா.ஜ., எம்எல்ஏ.,வும் உதவி செய்யவில்லை. ஆகவே, நானே இறங்கி வேலை செய்தேன்’ என்றார்.
புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் ஒருவர் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ள வீடியோ வைரலானது.டில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.