எலான் மஸ்க் தொடங்கும் புதிய சோஷியல் மீடியா?

Tesla
நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான
Elon Musk
, சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இப்போது
எலான் மஸ்க்
தனது சொந்த சோஷியல் மீடியா தளத்தை விரைவில் தொடங்குவார் என்று பேசப்படுகிறது.

இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, எலான் மஸ்க் மிகப்பெரும் சமூக வலைத்தளமான ட்விட்டர் குறித்து அதிரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு

ட்விட்டரில் நியாயமான பேச்சுரிமைக்கு இடமளிக்கப் படுகிறதா என எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அப்போது பெரும்பாலான ட்விட்டர் பயனாளிகள் இல்லை என்றே தங்களின் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

இதற்கு உடனடியாக பதிலளித்திருந்த அவர், “ட்விட்டரில் பயனர்களின் பேச்சுரிமைக்கு இடமளிக்கப் படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, புதிய சமூக வலைத்தளத்தை எதிர்பார்க்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு சில மணி நேரங்களில், எலான் மஸ்க்கை பின் தொடரும் நபர் அந்த ட்விடிற்கு பதில் பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு Open Source தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும். அதில், அனைவராலும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

காத்திருந்து பதிலளித்தது போல, எலான் உடனடியான அந்த ட்விட்டிற்கு பதிக்லளித்தார். இதை குறித்து தான் நான் தீவிரமாக யோசித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். சுதந்திரமான பேச்சு ஜனநாயகத்திற்கு முக்கியமானது எனக் கூறி மஸ்க் பல முறை ட்விட்டரை சாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய ‘Rossgram’ ஆப்!

ட்ரூத் சோசியல் ஆப்

சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த ‘
Truth Social
‘ எனும் சமூக ஊடக தளத்தைத் தொடங்கினார்.

தனது பதிவுகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் நீக்குவதை கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப், சொந்த தளத்தை விரைவில் உருவாக்குவேன் என அறைக்கூவல் விடுத்திருந்தார். அதன்படி, பயனர்களுக்காக தனது ‘Truth Social’ செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு வந்த சில வன்முறை தூண்டும் தகவல்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர்.

உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால், அப்போதைய அதிபர் டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் தடை விதித்தன.

மேலதிக செய்திகள்:

flipkart sale: சும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க! – Samayam Tamiltrump app: திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – ‘Truth Social’ ஆப் மூலம் Twitter பேஸ்புக்குக்கு செக் வைத்த டிரம்ப்!safe messenger app: சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?

அடுத்த செய்திசும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.