பர்தா அணிந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்த, பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகத்திற்கு சீல்

ஹ்ரைனில் பர்தா அணிந்து வந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக இந்திய உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தலைநகர் மனாமாவில் இயங்கி வந்த பஹ்ரைன் லாந்தர்ஸ் என்ற இந்திய உணவகத்திற்கு பர்தா அணிந்து பெண்மணி வந்ததாகவும், அவரை உணவகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக இந்திய உணவகத்திற்கு பஹ்ரைன் அதிகாரிகள் சீல் வைத்தனர். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய உணவக நிர்வாகம், சம்பந்தப்பட்ட மேலாளரை இடைநீக்கம் செய்ததாக விளக்கமளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.