வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 5 லட்சம் பேருக்கு இலவச விசா – மத்திய அரசு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான விமான சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச விசாக்கள் வழங்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்பு பாதைக்கு கொண்டு வரும் நோக்கில் விசா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 170 நாடுகளில் மீண்டும் இ-விசா வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி இந்திய தூதரகங்களுக்கு விசாவுக்காக செல்ல வேண்டியது இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.