உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது – உக்ரைன்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சிறப்புபடைப் பிரிவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட ராணுவ குழு உக்ரைன் அதிபரைக் கொல்ல ரஷ்ய அரசால் அனுப்பப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஸ்லோவேகியா-ஹங்கேரி எல்லையில் வைத்து 25 பேர் கொண்ட ராணுவக் குழுவை கைது செய்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

இதுதொடர்பான செய்தியை கீவ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதிபர் ஜெலன்ஸ்கியைக் கொல்ல தொடர்ந்து ரஷ்யா முயன்று வருவதாகவும், இதுதொடர்பான பல முயற்சிகளை தங்களது ராணுவம் முறியடித்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.