தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரம்.. இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்.!!

கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

கடலூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனிமையில் இருந்த நேரத்தில் மூன்று இளைஞர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அந்த வீடியோவை காட்டி அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது .அவர்கள் மூன்று பேரிடமும் காவல்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.