நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதுச்சேரியிலும் எதிர்கட்சிகள் முழு கடையடைப்பு மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாத நிலையில், ஒரு சில அரசுப் பேருந்துகள் மட்டுமே காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. மேலும் முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.