பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி 3 பேர் பலி| Dinamalar

பென்சில்வேனியா:அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் பனிப்பொழிவு மிகவும் கடுமையாக இருந்தது. அப்போது சாலையில் கார் மற்றும் ஜீப்புகளில் பலர் சென்று கொண்டிருந்தனர். பனிப்பொழிவு காரணமாக சாலை தெரியாததால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இதில் 50 முதல் 60 வாகனங்கள் வரை மோதிக் கொண்டதாக போலீசார் கூறினர். சில வாகனங்கள் தீப்பற்றின. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.