“சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு?” – எடப்பாடி பழனிசாமி

சென்னை, பல்லாவரம் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவர் கணவர் முரளியின் தம்பி தினேஷ் என்பவர் சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார். அவருக்குப் பணம் கொடுக்க மறுத்த கடைகளை அடித்துச் சேதப்படுத்தியிருக்கிறார். மேலும் திமுக கவுன்சிலரின் கணவர், வீடு கட்டும் உரிமையாளரை கூப்பிட்டு மிரட்டும் வீடியோவையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டரில், “தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர், கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல், மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரெளடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள்.

மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த திமுக அரசு?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.