#தமிழகம் || இன்ஸ்டாவில் நாடக காதலன் செய்த செயல்., சம்பவம் செய்த இளம்பெண்.,  தட்டி தூக்கிய போலீஸ்.!

இன்ஸ்டாகிராமில் 23 வயது இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாதன் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கோபிநாதன், அந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

அந்த இளம்பெண் கோவை மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோபிநாதனை கைது செய்து, கோவையிலுள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.