பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 127 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு கடந்த 20ம் தேதி முதல் தினசரி மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.101.14 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.89.60 ஆக இருந்தது.நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.76 பைசா உயர்த்தப்பட்டது. இதனால், பெட்ரோல் லிட்டர் ரூ.101.92 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 90.36 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.