அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு இலங்கை அதிபர் அழைப்பு| Dinamalar

கொழும்பு: நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் அமைச்சர் பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயல்பட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில், 26 கேபினட் அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சர் பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயல்பட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், புதிய நிதியமைச்சராக அல் சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனே, வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், நெடுஞ்சாலை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இன்று (ஏப்.,4) பதவியேற்றனர். நிரந்தர அமைச்சரவை அமையும்வரை தற்காலிக அமைச்சரவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொருளாதார நெருக்கடியால் இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவர்த் கேப்ரல் ராஜினாமா செய்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.