கத்தியை காண்பித்து காரில் பசு கடத்தல்| Dinamalar

உடுப்பி, : கார்காலாவில் ஆயுதங்களை காட்டி மிரட்டி, பசுவை நேற்று அதிகாலை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படும் சம்பவம் குறைந்தாலும், ஆங்காங்கே காரில் மாடுகள் கடத்தப்பட்டு வருகிறது.கார்காலா பங்களேகுட்டே அருகிலுள்ள வித்யா சரஸ்வதி மந்திர் வளாகத்தில் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

நேற்று அதிகாலை 2:45 மணியளவில், இங்கிருந்து மாடு ஒன்றை காரில் கடத்த முயற்சித்ததை, அங்கிருந்த சிலர் பார்த்து தடுக்க முயற்சித்தனர்.அப்போது கடத்தல்காரர்கள், கத்தியை காண்பித்து மிரட்டி, மாட்டை கடத்தி சென்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார், காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, போலி என்பது தெரியவந்தது.போலீசார் அலட்சியமாக நடந்து கொள்வதாக, பல்வேறு ஹிந்து அமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.