உடுப்பி, : கார்காலாவில் ஆயுதங்களை காட்டி மிரட்டி, பசுவை நேற்று அதிகாலை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படும் சம்பவம் குறைந்தாலும், ஆங்காங்கே காரில் மாடுகள் கடத்தப்பட்டு வருகிறது.கார்காலா பங்களேகுட்டே அருகிலுள்ள வித்யா சரஸ்வதி மந்திர் வளாகத்தில் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.
நேற்று அதிகாலை 2:45 மணியளவில், இங்கிருந்து மாடு ஒன்றை காரில் கடத்த முயற்சித்ததை, அங்கிருந்த சிலர் பார்த்து தடுக்க முயற்சித்தனர்.அப்போது கடத்தல்காரர்கள், கத்தியை காண்பித்து மிரட்டி, மாட்டை கடத்தி சென்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார், காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, போலி என்பது தெரியவந்தது.போலீசார் அலட்சியமாக நடந்து கொள்வதாக, பல்வேறு ஹிந்து அமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.
உடுப்பி, : கார்காலாவில் ஆயுதங்களை காட்டி மிரட்டி, பசுவை நேற்று அதிகாலை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.