சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நீதி புரத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த யானையின் சடலம், கயிறு கட்டி மீட்கப்பட்டது. வட பர்கூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த யானை ஒன்று, மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது.
அதிகாலையில் கிணற்றில் யானை விழுந்த நிலையில் நீண்ட நேரமாக அங்கு யாரும் செல்லாத தால், இதுகுறித்த தகவல் தெரியவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த வழியாக சென்ற சிலர் யானை விழுந்த தை அறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அதற்கும் அந்த யானை உயிரிழந்த நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் உள்ள நீரை இறைத்து வெளியேற்றி யானையின் உடலை கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்டனர்.