உடுப்பி : ெஷட்டில் திடீரென தீப்பிடித்ததில் உறங்கி கொண்டிருந்தவர் எரிந்து பலியானார்.உடுப்பி குந்தாபூர் கங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் கார்வி, 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது வசித்து வரும் வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வீட்டின் அருகிலேயே ெஷட் ஒன்று அமைத்து, அதில் இவரும், இவரது மனைவி யசோதாவும் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கணேஷ் கார்வி வீடு திரும்பினார். காலையில் அவரது மனைவிக்கு பணிக்கு சென்று விட்டார். காலை 8:30 மணியளவில் இவர் உறங்கிக் கொண்டிருந்த ெஷட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க முற்பட்டனர்.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால், கணேஷ் கார்வி, தீயில் எரிந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.கங்கோலி போலீசார் விசாரிக்கின்றனர்.
உடுப்பி : ெஷட்டில் திடீரென தீப்பிடித்ததில் உறங்கி கொண்டிருந்தவர் எரிந்து பலியானார்.உடுப்பி குந்தாபூர் கங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் கார்வி, 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.