ஷெட்டில் தீ விபத்துமீன் தொழிலாளி பலி| Dinamalar

உடுப்பி : ெஷட்டில் திடீரென தீப்பிடித்ததில் உறங்கி கொண்டிருந்தவர் எரிந்து பலியானார்.உடுப்பி குந்தாபூர் கங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் கார்வி, 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது வசித்து வரும் வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வீட்டின் அருகிலேயே ெஷட் ஒன்று அமைத்து, அதில் இவரும், இவரது மனைவி யசோதாவும் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கணேஷ் கார்வி வீடு திரும்பினார். காலையில் அவரது மனைவிக்கு பணிக்கு சென்று விட்டார். காலை 8:30 மணியளவில் இவர் உறங்கிக் கொண்டிருந்த ெஷட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க முற்பட்டனர்.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால், கணேஷ் கார்வி, தீயில் எரிந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.கங்கோலி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.