ஜனாதிபதிக்கு சென்றது மற்றுமொரு இராஜினாமா கடிதம்! பதவி விலகும் அரச முக்கியஸ்தர்



திறைசேரி செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.ஆர்.ஆடிகல அறிவித்துள்ளார்.

மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்தை சேர்ந்த பலரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் பொது மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி காரணமாக வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.