பொருளாதார நெருக்கடி முற்றுவதால் நார்வே, ஈராக் நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடுவதாக இலங்கை அரசு அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக நார்வே, ஈராக் நாடுகளில் உள்ள தூதரகங்களையும், ஆஸ்திரேலியாவில் உள்ள துணை தூதரகத்தை மூடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார சூழல் மற்றும் வெளிநாட்டு நாணய கட்டுப்பாடு காரணமாக ஓஸ்லோ, பாக்தாதில் உள்ள தூதரகங்களும், சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் வரும் 30ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூதரகங்களை மூடும் நடவடிக்கையால் அந்நாடுகளுடனான இருதரப்பு உறவு எந்த வகையில் பாதிக்காது என்றும் அவர்களுடனான நட்பு மற்றும் நல்லுறவு பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.sr

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.