பேருந்தின் கூரை மீது ஏறி பயணம் செய்த பயணிகளுக்கு மேலே சென்று டிக்கெட் வழங்கிய நடத்துனர்

கேரள மாநிலம் பாலக்காட்டில் அளவிற்கு அதிகமாக பயணிகளை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில், கூரை மீது ஏறி பயணம் செய்த பயணிகளுக்கு நடத்துனர் மேலே சென்று டிக்கெட் வழங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நென்மாறா-கோழிக்கோடு வழியாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் கம்ப வெடிக்கட்டு நிகழ்ச்சி பார்க்க சென்ற மக்கள் பேருந்தின் உட்புறம் உட்பட கூரையின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவால், பேருந்தின் நடத்துனர், ஓட்டுனர் மேல் கேரளா போக்குவரத்துதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.