காரில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் தனுஷ்… குட் நியூஸ் சொன்னஅண்ணி!

செல்வராகவன்
இயக்கத்தில் நடிகர்
தனுஷ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் திரைப்படம் ‘
நானே வருவேன்
‘. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். காரில் ஒய்யாரமாக படுத்தப்படி தனுஷ் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள
கீதாஞ்சலி
வராங்க வராங்க… என குறிப்பிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது ஸ்கர்ட்டா? இல்ல டாப்பா? கன்ஃபியூஸ் பண்ணும் நாகினி நடிகை!

இதனை பார்த்த நெட்டிசன்கள் வா தலைவா என்றும், சம்பவத்துக்காக வெய்ட்டிங் என்றும் பதிவிட்டு தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நானே வருவேன் படத்திற்காக நடிகர் தனுஷ் உடல் எடையை கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.