‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் பகிர்ந்த புகைப்படம் – வெளியான அப்டேட்

‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துவிட்டதாக நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் – இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

image

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து காரின் மேல் அமர்ந்து இருப்பது போன்று புகைப்படத்தை பகிர்ந்து, படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.