வாரன்ட் கொடுத்த ஏட்டு விரலை கடித்த வாலிபர்| Dinamalar

தட்சிண கன்னடா : ‘வாரன்ட்’ கொடுக்க சென்ற இரு போலீஸ் ஏட்டுகளை தாக்கி, விரலை கடித்த நபர் கைது செய்யப்பட்டார்.தட்சிண கன்னடா பெல்தங்கடி பில்யா கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்திப், 45. குற்றவழக்கு தொடர்பாக, அவருக்கு வாரன்ட் கொடுக்க, ஏப்ரல் 8ல், சங்கரநாராயணா போலீஸ் நிலையத்தை சேர்ந்த இரு ஏட்டுகள் சென்றனர்.அப்துல் லத்திப்பிடம், வாரன்டை காட்டியவுடன் கோபமடைந்த அவர், அதை பறித்து, போலீசாரை திட்டினார். பின், போலீசாரை தாக்கி, கற்களை வீசினர். அப்போது, ஏட்டு ஒருவரின் ஆள்காட்டி விரலை, கடித்து காயப்படுத்தினார். அப்துல் லத்திப்பை கைது செய்த வேனுார் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.