கொலைகள் அதிகரிப்பு குமாரசாமி குற்றச்சாட்டு| Dinamalar

பிடதி, : ”பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் கர்நாடகாவில் கொலைகள் அதிகமாகியுள்ளன,” என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.ராம்நகர் மாவட்டம், பிடதி அடுத்த கீதகானஹள்ளியில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பண்ணை வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் நேற்று செய்தியாளர்களை குமாரசாமி சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:பெங்களூரு கோரிபாளையாவில் சந்துரு என்ற இளைஞரை, உருது மொழி பேசவில்லை என்பதால், அவரை கும்பல் ஒன்று கொலை செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகிறார்.மற்றொரு புறம், பைக் இடித்ததால் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக போலீஸ் கமிஷனர் கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்?சமூக விரோதிகள் இருந்தால் அவர்களை சிறையில் தள்ளுங்கள். சர்ச்சை விஷயங்களை பேசாமல் உள்துறை அமைச்சரால், வாயை மூடி கொண்டு இருக்க முடியாதா?பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் கர்நாடகாவில் கொலைகள் அதிகமாகியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.