பிலிப்பைன்சில் 25 பேர் பலி| Dinamalar

மணிலா:தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி25பேர் இறந்தனர்.பிலிப்பைன்சில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, தெற்கு மற்றும் மத்திய பிலிப்பைன்சின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை, ௨௫க்கும் அதிகமானோர் பலியானதாக பிலிப்பைன்ஸ் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே, அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என, வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.