புதுடில்லி: நாடு முழுதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, குஜராத்தில் திருமணம் ஒன்றில், மாப்பிள்ளைக்கு எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாடு முழுதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் எலுமிச்சை வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துஉள்ளது.வட மாநிலங்களில் ஒரு பழம் 10 – 15 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ 200 – 250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தோராஜி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மாப்பிள்ளைக்கு பலர், பெட்டி பெட்டியாக எலுமிச்சை பழங்களை திருமண பரிசாக அளித்தனர். ‘இந்த கோடை காலத்தில் எலுமிச்சை பழங்களின் தேவை தவிர்க்க முடியாதது. ஆனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை பரிசாக அளித்தோம்’ என, திருமணத்துக்கு வந்தவர்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதுடில்லி: நாடு முழுதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, குஜராத்தில் திருமணம் ஒன்றில், மாப்பிள்ளைக்கு எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்த சம்பவம் அரங்கேறி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.